Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மும்பை: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், ஐபிஎல் அணியின் பங்குதாரராகவும் வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி .
இந்த நிலையில், தற்போது இவர் இந்தியன் போலீஸ் போர்ஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். இந்த நிலையில், ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பையில் உள்ள ஜூஹூ பகுதியில் அமைந்துள்ளது.
இவரது பிறந்த நாளை முன்னிட்டு தன் குடும்பத்தினருடன் அவர் இத்தாலிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில், அவரது வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, அவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வழக்கு ஒன்று பதிவு செய்த போலீஸார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.